பக்கங்கள்

வெள்ளி, 24 மார்ச், 2017


தல்ஸ்தோய்க்கு  நிகரான எழுத்தாளர் . உலகின்  எந்த எழுத்தாளருக்கும்  தாழ்ந்தவரில்லை . நோபல் பரிசே கிடைத்திருக்க வேண்டும். ஞான பீடம் கூட கொடுக்க விட வில்லை சிறுமதியாளர்கள் . கேரளாவில் , கர்நாடகாவில் மகத்தான எழுத்தாளர்கள்  மறையும்போது  முதலமைச்சர்கள்  அஞ்சலி செலுத்துகிறார்கள். நாடே துக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் அசோக மித்திரன் யாரென்றே பெரும்பாலாருக்கு தெரியாது. பாரதியின்  இறுதி ஊர்வலத்திலேயே ஐம்பதுக்கும் குறைவானர்களே பங்கு கொண்டிருக்கிறார்கள். தன்  கலாச்சார உன்னதங்களை அடையாளம் கண்டு கொள்ளாத , கௌரப்படுத்தாத எந்த சமூகம் உருப்படும் ? ஆனால் அசோக மித்திரன் படைப்புகள் காலம் கடந்து வாழும். வாழையடி வாழையாக  வரும் இலக்கிய வாசகர்கள் அவருக்கு தங்கள் வாழ்க்கையில்  முக்கிய இடம் கொடுப்பார்கள். என் குடும்பத்தில் ஒருவரை இழந்த துக்கம் ஏற்படுகிறது. அவருக்கு என் அஞ்சலிகள்.