பக்கங்கள்

சனி, 23 அக்டோபர், 2010

EN MUTHAL KAADALI

நல்ல புத்தகங்கள் ஒரு மாயலோகம். படிப்பின் ஈர்ப்பு ஒரு புதைகுழியை போன்றது. படிப்பின் சுவை மனதில் ஊறிப்போனால் திரும்பவே முடியாது. ஒரு வாசகனுக்கு ஒரு நல்ல புத்தகத்தை படிக்கும்போது கிடைக்கும் இன்பம் வேறு எதிலுமே கிடைக்காது. எத்தனை முறை KARAMAZOV BROTHERS படித்தாலும், ஒவ்வொரு தடவையும் DOESTOVESKY புது புது  உலகங்கள் காட்டிக்கொண்டே இருக்கிறார். எத்தனை முறை படித்தாலும் CITADEL  அலுக்கவே மாட்டேன்கிறது . சில பக்கங்களை படிக்கும்போது உடல் சிலிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை. JOB SATISAFACTION  - நின் அற்புத உதாரணம் CITADEL . ஆண் பெண் உறவுகளின் நுண்ணிய முடிச்சுகளை அற்புதமாக சித்தரிக்கும் ஜானகிராமனின் மோகமுள் எதனை முறை கேட்டாலும் அலுக்காத ஒரு  இனிய பாடல். அசோக மித்திரனின் சிறுகதைகளை படித்து முடித்ததும் அவை மனதில் எழுப்பும் உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு தாங்க முடியாத துயரத்தை எளிமையான வார்த்தைகளில் எப்படி இவரால் எழுப்ப முடிகிறது என்று வியந்து கொண்டே இருப்பேன். சுந்தர ராமசாமியின் ஜே ஜே  சிலகுறிப்புகள் தமிழ் நடையின் ஒரு சிகரம் என்றே சொல்வேன்.  ஆண் பெண் உறவுகளின் மென்மையான உணர்வுகளை சித்தரிப்பதில் மற்றுமொரு பிதாமகன் கு.பா. ரா. லா. சா.ரா வின் வார்த்தை ஜாலம், சுஜாதாவின் ஜெட் எழுத்து, WODEHOUSE -ன் மெல்லிய புன்னகையை வரவைக்கும் COMDEDY , SHERLOCK HOLMS -ன் சுவாரசியம், கிப்ரானின் கவித்துவம் , O .HENTRY-ன் முத்தாய்ப்பு என  என்னை கட்டிபோட்ட எழுத்துக்களை சொல்லிக்கொண்டே போகலாம். எதனை எழுதினாலும், முக்கியமான நிறைய புத்தகங்களை விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வே மிஞ்சுகிறது. பாருங்கள், என் பாரதியை கூட விட்டு விட்டேன். எத்தனை எழுதினாலும் என் முதல் காதலி எழுத்தின் மீதான என் ஈர்ப்பை முழுமையாக எழுத என் எழுத்தால் முடியவில்லை.

வியாழன், 21 அக்டோபர், 2010

ISAI PADA VAALTHAL

ஷாஜியின் இசை பற்றிய கட்டுரைகள் நிச்சயம் ஒரு வெற்றிடத்தை சமன் செய்கிறது. S . ஜானகியையும், A .M . ராஜாவையும்,  மலேசியா வாசுதேவனையும்  எத்தனை முறை கேட்டிருந்தாலும் , ஷாஜியை படித்தபிறகு மீண்டும் கேட்கும்போது புதிய ஆழம் கிடைக்கத்தான் செய்கிறது., நம் வாழ்வோடு ஒன்றி கலந்துவிட்ட திரை இசை பற்றியோ அந்த குரல்களைபற்றியோ ஆழமான கட்டுரைகள் ஷாஜிக்கு முன் தமிழில் இல்லை. ஷாஜியை படித்தபிறகு ஜானகியின் குரலிலும் , சலீல் சௌதரியின் இசையிலும் புதிய அர்த்தங்கள் புலனாகிறது.  அதுவும் மலேசியா வாசுதேவனைப் பற்றிய கட்டுரையை படித்தபிறகுதான்  அவர் பாடிய எத்தனையோ அற்புதமான பாடல்களை அவர்தான் பாடினார் என்று தெரியாமலே ரசித்து கேட்டுகொண்டிருந்திருக்கிறோம்  என்பதை உணர முடிகிறது.  ஆனால்  எல்லா இளையராஜாவின் ரசிகர்களைப் போலவே , அவரைப் பற்றிய கட்டுரையை ஏற்றுகொள்ள முடியவில்லை. அதில் அதிகம் சாரம் இல்லை என்பது மட்டுமல்ல  இளையராஜா ஒரு நல்ல மனிதர் அல்ல என்று நிரூபிக்க ஷாஜி முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அது அவர் இசையின் மேதமையை குறைக்க சரியான காரணம் என்று தோன்றவில்லை. அந்த கட்டுரையை பற்றி இணையதளங்களில்  வந்த பல ஆவேசமான கட்டுரைகள் ஒன்றையே நிச்சயிக்கிறது. இளையராஜா பலரின் வாழ்வையும் ரொம்பவே பாதித்திருக்கிறார். மனசு அலை பாய்கிரபொழுது , மனசு கனமாகி இருக்கிறபொழுது, சந்தோசமாய் இருக்கிறபொழுது ராஜா கூடவே இருந்திருக்கிறார்.  எனக்கே இங்கே இந்த மொழி தெரியா காட்டில் ,  தனிமைக் கனங்களில், கோடையில் மழை வரும், வசந்தகாலம் மாறலாம், எழுதிசெல்லும் விதியின் கைகள் மாறுமோ என்கிற ஜெயிசியின் சோகம் கலந்த குரலை கேட்கும்போது மனதை எதோ செய்யத்தான் செய்கிறது.  பூங்கதவே தாள் திறவாய், பருவமே புதிய பாடல் பாடு , பூவே செம்பூவே, மௌனமான நேரம் போன்ற எண்ணற்ற பாடல்களில்  இளையராஜாவின்  இசைக்கோலங்கள்  மனதில் மீட்டுசெல்கிற  உணர்வுகளுக்கு ஈடு ஏது?