பக்கங்கள்

வியாழன், 2 ஜனவரி, 2014

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு ,

                                             நீண்ட நாட்களாக நான் ஏங்கிய விஷயம்  மகாபாரதத்தை முழுமையாக படிக்கவேண்டும் என்பது . ஆனால் அந்த மகாகாவியத்தின்  பிரம்மாண்டத்திற்கு முன்னால் மலைத்துத்தான்   போக வேண்டியிருக்கிறது. யாராவது  நம் மொழியில்  இதை தர மாட்டார்களா என்று ஏங்கினேன் . அதே  சமயம் எளிமை படுத்துகிறேன் என்று சிறுமை படுத்தி விடக் கூடாது . ஆனால்  நம் ஜெயமோகனே செய்கிறார்  என்பது ஒரு பாக்கியம் . இனி தினமும் சோமுவின்  காதில் சாத்தனூர் கோவில் மணி ஓசை   ஒலித்துக்   கொண்டிருந்தது போல   வெண்  முரசின் ஒலியும் என் உள்ளில்  ஒலித்து   கொண்டேஇருக்கும் .

அன்புடன்

A . ராமகிருஷ்ணன்