பக்கங்கள்

வியாழன், 15 ஜனவரி, 2015



பெருமாள் முருகன் மீது  திருசெங்கோடை சேர்ந்த ஜாதி அமைப்புகளும் மத தீவரவாதிகளும் , அரசு இயந்திரமும்  நடத்திய அடக்குமுறை தமிழ் மீதும் தமிழ்நாட்டின்மீதும் , இந்திய கலாச்சாரத்தின் மீதும் அக்கறை உள்ளவர்கள்  கண்டனம் செய்ய வேண்டிய ஒன்றாகும். இன்று உங்கள் தளத்தில்  திருசெங்கோடை சேர்ந்த ஒரு அன்பர் எழுதிய கடிதம் வாசித்தேன். அரசு அதிகாரிகள் நடத்திய சமரச (!) கூட்டம் எப்படி நடந்தது என்று பெருமாள் முருகனுடன் சென்ற நண்பர் கொடுத்த பேட்டியை  Hindu -வில் படித்தாலே தெரியும். இது கட்டை பஞ்சாயத்து இல்லாமல் வேறு என்ன ? திருசெங்கோடில்  பணி  புரிந்த ஒரு முன்னாள்  அரசு அதிகாரி இன்றைய Hindu  -வில் அந்த மாதிரி ஒரு சடங்கு முன்காலங்களில் நடந்ததாக கேள்விப்பட்டதாக எழுதியிருக்கிறார். அந்த சடங்குக்கு இந்து மதத்தில் இடம் இருப்பதாக பல நிபுணர்களும் சொல்கிறார்கள். அந்த சடங்கை பயன்படுத்தி குழந்தையில்லாத  ஒரு தம்பதி குழந்தை பெற்று கொள்வதாக  எழுதுவது எப்படி திருசெங்கோடை அவமதிப்பதாகும் ? நல்லவேளை  திரௌபதி  ஐந்து பேரை கல்யாணம் செய்வதாக இப்போது ஜெயமோகன் நாவல் எழுதினால் சாத்தி  விடுவார்கள். வியாசர் இந்த கலாசார காவலர்கள் வருவதற்கு முன்பே மகாபாரதம் எழுதிவிட்டார் . பெருமாள் முருகன் திருசெங்கோடை அவமதிக்கவில்லை. இவர்கள் தான் அவமதிக்கிறார்கள் . இவர்கள் புரிந்து கொள்ளாத  விஷயம் மாதொரு பாகன்  அழிந்து போகாது. பெருமாள் முருகன் எழுதுவதை நிறுத்தினாலும் , எல்லா புத்தகங்களையும் எரித்து விட்டாலும் அது மீண்டும் உயிர்த்து எழும் . எழுத்தின் சக்தி அது. பெருமாள் முருகன் புத்தகத்தை பல நூறு பேர்தான் படித்திருப்பார்கள். இவர்களே அதை உலகளாவிய அளவில் பரப்பி விட்டார்கள். இன்னும் ஓன்று சில அறிவு ஜீவிகள் சென்னையில் இருந்துகொண்டு பெருமாள் முருகன் எடுத்த முடிவை விமர்சிக்கிறார்கள். அவர் சூழ்நிலை அவருக்குதான் தெரியும். அவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிற உரிமை அவருக்கு இருக்கிறது. அன்புடன் ராமகிருஷ்ணன் 

கருத்துகள் இல்லை: