பக்கங்கள்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அறம் , சோற்று கணக்கு - ஜெயமோகனின் புதிய சாதனைகள்

ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதைகளான  அறம், சோற்று கணக்கு இரண்டையும் அவரது தளத்தில் படித்தேன். நிச்சயம் அவரது சிறந்த படைப்புகளில் இவை சேரும்.  அறம் இதுவரை மூன்று முறை படித்துவிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் கண்ணில் நீர் மல்குவதை தவிர்க்கமுடியவில்லை. அறம் அது அவகிட்ட அல்ல இருந்தது என்ற முத்தாய்ப்பில் ஒ. ஹென்றியின் இறுதி வரிகள் தருகிற பரவசம் கிடைக்கிறது. இந்த கதையை எழுத்தாளர்களை , மற்ற எளியவர்களை சுரண்டி பிழைக்கிற கயவர்களை எல்லாம் படிக்க சொல்ல வேண்டும். கொஞ்சம் பேருக்காவது சொரணை வராதா?  கேதேல்  சாகிப்பு மகத்தான பாத்திரபடைப்பு.  இந்த மாதிரி மகாத்மாக்களும்  வாழ்ந்திருக்கிறார்கள் என்று எண்ணும்போது நிறைவாக இருக்கிறது. இந்த இரண்டு கதைகளும் நிச்சயம் ஜானகிராமனின் தரத்தை  அடைந்தவை

கருத்துகள் இல்லை: