பக்கங்கள்

செவ்வாய், 11 ஜனவரி, 2011

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு,
                                   
                                                     நிறைய  வேலை நெருக்கடிக்கு இடையிலும் பதில் அனுப்பியதற்கு நன்றி. உங்கள் நாவல்களைப்பற்றி கொஞ்சம் எதிர்மறையாக எழுதியபோதும் பொறுமையுடன் பதிலளித்த உங்கள் பண்பு என்னை கவர்ந்தது.   ஒரு சிறு விளக்கம்.  நான் முதல் வகை நாவல்களே சிறந்தவை என்று எண்ணவில்லை. அவைகளே எனக்கு பிடிக்கிறது என்றுதான் சொன்னேன். ஆனால் எங்கும் நின்று விடும் உத்தேசமில்லை எனக்கு. முன்னகரவே விரும்புகிறேன்.  ஆகவே இந்த நாவல்களை  மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு     செய்வேன்.  ஒருவேளை  மீண்டும் படிக்கும்போது புதிய  அழகுகள் புலனாக கூடும். 46  வயது நின்று விடும் வயதல்ல என்றே நினைக்கிறேன். . 

நான் இப்போது U .P -யில் இருக்கிறேன். கொற்றவை வாங்கி அனுப்ப சொல்லியிருக்கிறேன். படித்து விட்டு எழுதுவேன்.  இதே வரிசையில் நான் படிக்க ஏதேனும் நல்ல நாவல்கள் ஆங்கிலத்திலும் , தமிழிலும்  சொல்லுங்களேன்  . எனக்கு ஆற்றோட்டமான கதைகள்தான் பிடிக்கும்  என்றில்லை. எனக்கு ரொம்பவும் பிடித்த புத்தகங்களான  ஜே. ஜே. சில குறிப்புகள் , THE OUTSIDER  போன்றவை அப்படியில்லையே?  

எனக்கு இரண்டு சந்தேகம். 1 . இரண்டாம் வகை நாவல்கள் தான் சிறந்தவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 2 . என் நடையை பயில்முறைதன்மை கொண்டது என்று சொல்லியிருக்கிறீர்கள்.  எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கமுடியுமா?  என் நடையை மேம்படுத்த உண்மையாகவே விரும்புகிறேன்.  உங்கள் ஆலோசனைகள் எனக்கு உதவியாகவிருக்கும். உங்கள் வேலைபளுவைப்பற்றி நான் அறிவேன்.  மீண்டும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். இந்த கடிதத்திற்கு மட்டும் பதில் அளிக்கவும்.
அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு
சத்தியமான வார்த்தைகள்.

இந்த பிரிவில் எனக்கும் என் மனைவிக்குமான புரிதல் மேம்பட்டதை உணர்ந்திருக்கிறேன்.

இன்றைய  என் வாழ்வில் உங்கள் வலைப்பூவின் பங்கு மகத்தானது.  எனக்காக நேரம் செலவிட்டதில் நன்றி.

அன்புடன்

ராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: