பக்கங்கள்

புதன், 5 ஜனவரி, 2011

NAMMA NAANCHIL NADAN!

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது ஏதோ எனக்கே கிடைத்ததைப்போல ஒரு சந்தோஷம். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்களின் சிந்தனையும்  என்னுடையதும் எப்போதும் ஒத்துப்போவது போல ஒரு தோணல். நாஞ்சில் நாட்டிற்கே உரிய எள்ளல் மிகுந்த அவரின் நடை, பெண் பயணிகள்  சிறுநீர் கழிக்க  அவர்களுக்கு இருக்கிற பிரச்சினைகள், சதை வியாபாரம் செய்கிற பத்திரிக்கைகள் என்று பல சமூக பிரச்சனைகளிலும் அவர் காட்டுகிற தார்மீக கோபம் என்று அவர் எழுத்து பல விதங்களில் ஈர்க்கிறது
அவருடைய மிதவை, மாமிசப்படைப்பு, தலைகீழ்  விகிதங்கள், என்பிதலதனை வெயில் காயும் எல்லா புத்தகங்களோடும் வாழ்ந்திருக்கிறேன். என்னையே கண்ணாடியில் பார்ப்பதாக உணர்ந்திருக்கிறேன்.  நான் தான் கொஞ்சம் சண்முகம் , கொஞ்சம் நாராயணன், கொஞ்சம் சிவதாணு, கொஞ்சம் பூதலிங்கம்....
.மேலும் அவரும் என்னைப்போலவே ஒரு TEXTILE  பிராணி. மில்லில் வேலை செய்யாவிட்டாலும் ஏதோ WINDING MACHINE  விற்பதற்காக ஊர் ஊராய் அலைந்திருக்கிறார். பிழைப்பிற்காக வெளியூர் சென்று அவதிப்படும் நம்ம வாழ்வை அழகாய் எழுதியிருக்கிறார்.  மேலும் என்னைப்போலவே ஒரு சாப்பாட்டுப்பிரியர்   என்பது அவர்  ரசித்து எழுதியிருப்பதிலியே தெரிகிறது. அப்புறம் என்ன நாஞ்சில்நாடன் நம்ம ஆள்தானே! வாழ்த்துக்கள் நாஞ்சில் !!. இன்னும் நிறைய எழுத வேண்டும். ஆண்டவன் அதற்கு நல்ல ஆயுளை தரவேண்டும்.!

1 கருத்து:

எஸ்.ஐ.சுல்தான் சொன்னது…

>நான் தான் கொஞ்சம் சண்முகம் , கொஞ்சம் நாராயணன், கொஞ்சம் சிவதாணு, கொஞ்சம் பூதலிங்கம்<

நானும்தாங்க!